Sunday, December 5, 2010

நாட்டமை தீர்ப்பு


ஒத்திகை என்றதும்

உடனடி நடவடிக்கை

நிஜத்தில் நடந்த போது

நித்திரையில் - போலீஸ்

பாலியியல் பலாத்கார

பாவிக்கு பாதுகாப்பு எதுக்கு

என்கவுண்டரில் போட்டு தள்ள

என்விரோமேண்டல் கிளியரன்ஸ்

தேவை இல்லை ..

வேண்டிய விவரங்களுக்கு

விவேக் காமெடி பார்க்கவும்

Thursday, November 25, 2010

"குதிரை புல்லோடு..

"குதிரை புல்லோடு நட்பு கொண்டால் பட்னி சாவு" கேட்ட நல்ல இருக்குதுல்ல இந்த பழமொழி அதை சொன்ன இடம் எது என்று தெரிந்தால் வேதனையா இருக்கும் .. சொன்னவர் திருப்பதி உண்டியலில் ஐம்பது லட்சத்தை காணிக்கையா போட்டுவிட்டு போலியோ சொட்டு மருந்து விளம்பரத்திற்கு காணிக்கையை கறாரக வாங்கிய ஹிந்தி படஉலகின் முடிசூட மன்னன் அமிதாப் பச்சன் தான் வாங்கிய காணிக்கையை நியாய படுத்தி சொன்னது ..இது பழையவிசயம் இப்ப எதுக்கு நினைவு படுத்துற என கேட்ட தோணுமே ..! சமீபத்தில் தினகரன் தில்லி பதிப்பில் வசித்த விஷயத்தை உங்களுக்கு பிட்டு போடுகிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

Wednesday, November 24, 2010

காவியாவின் கைவண்ணம்




காவியாவின் கைவண்ணம் என்று எனக்கு இன்றும் ஒரு வலைப்பூ எழுத வேண்டும் போலிருக்கு அந்த அளவுக்கு ஒரு ஓவியம் ஓன்று அவள் வரைந்து பள்ளியின் ஆண்டு மலரில் வந்துள்ளது .. நீங்களும் ரசிக்கலாம் ... ரெண்டு வரி அந்த குழந்தையை பாராட்டி எழுதவும் தெரியணும் உங்களுக்கு

Tuesday, November 16, 2010

குழந்தைகள் தின ஓவிய போட்டி

என் அன்பிற்கு பாத்திரமான நண்பர் திரு செல்வகுமாரின் மகள் காவியா (6 வது வகுப்பு , இண்டஸ் வேலி பப்ளிக் ஸ்கூல் நொய்டா )..மாநில அளவிலில் நடந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டாள்..இடம் லக்னோ ...நாள் 14.11.2010அப்போது நண்பரின் புகைப்பட கருவி உள்வாங்கிய காட்சிகளை உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்
கவியா வரைந்த ஓவியம்









ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்


ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்

ஆறுதல் பரிசு பெற்ற ஓவியம்














இரெண்டாம் பரிசு பெற்ற ஓவியம்

முதல் பரிசு பெற்ற ஓவியம்


பங்கு பெற்றவர்கள்


Sunday, November 14, 2010

விருட்க்ஷம்


விதையிலிருந்து வந்த
விருட்க்ஷம்
வாடிப்போனது ஐயோ
துரதிஷ்டம்

கனியும் முன்பே
காய் பறிக்கப்பட்டது
விதையில் இருந்த மரமோ
கருவில் சிதைக்கப்பட்டது

கன்றை விடு
மடியில் பால் சுரக்கும்
மரக்கன்றை நடு
அவணியில் மழை பொழியும்

Saturday, November 6, 2010

கமல் பிறந்த நாள் வாழ்த்து


தொப்புள் கொடியில்
நீ குடித்தது - பரதம்
உன் நடிப்பில் கட்டுண்டு
கிடப்பது -பாரதம்
...


ஒய்வு எடுக்க
ஓடியது இல்லை
நீ தேடி இமயம்
உன்சாதனையில்
இளைப்பாறுமே அந்த சிகரம்


நவம்பர் தந்த
குறிஞ்சி மலரே ..!



அன்பே சிவம் என்று
பகுத்தறிவோடு பக்தியை
போதித்த பிராமண பெரியாரே ..!


நடிப்பின் இலக்கணமே- நீ
வாழவேண்டும் பல்லாண்டு

Tuesday, September 28, 2010

அன்பே கடவுள்

பாதயாத்திரையைபோய்
கால்நடையை காணிக்கையாய்
தந்து பக்தன் வீடு திரும்பும் முன்
தர்மகர்த்தாவின் மாடுதொழுவதில்

கறவைக்கு தயாரானது ...
காணிக்கை காமதேனு

******************************
முடிகாணிக்கை கொடுத்தவன்
தெருக்கோடியில்
காணிக்கை முடியோ ...
கோடியில் புரளும்
சூப்பர் ஸ்டாரின் வழுக்கை தலையில்
*************************
வாரி வழங்கும் வள்ளல்
பரிவட்டம் தலைகாட்டி
கர்ப்பக்கிரகத்தில் ..
வரம் தரும் சாமியோ
பிரம்படியை வாங்க
தருமதரிசனத்தில்

***********
"பாவிகளை மீட்க்க
தேவன் வருகிறான் "
வாசகம் சுமந்த தேவாலயத்தின்
உள்ளே நோக்கினேன்

ஒருவரையும் காணோம்
TARGET ACHIEVED



***********

பாவமன்னிப்பு கூறும்

பாதிரி விடுமுறையில்

பாவம் பாவிகள் ..

சுமைகளோடு ...!

**********

ஆசையை துறக்க

சொன்ன புத்தன்

போதிமரத்தடி நிழலில்

சுகமான சிந்தனையில்

*********

மயிலிறகில் ஏறும்பை

சுமந்து ...

மரத்தடி நிழலில் விட்டு

மார்வாடி சாய்வாக உக்கார்ந்தார்

மாத வட்டி கணக்கு பார்க்க ..


Saturday, September 25, 2010

ஓடிபோயிடலாம் ...!







ஒரு call பண்ணி



பதில் இல்லாது



மறு call பண்ண



மனமில்லாது



மறுகாலில் விழுந்து



இரு காலையும் உடைத்து



மரக்கால் போட்ட பின்



புத்திக்கு உரைத்தது



ஒருக்கால் நான்



மறு call பண்ணி இருந்தால்



வெறும் கால்களோடு



ஓடிவந்து இருப்பாள்



என்னவள் என்று ....

Saturday, September 4, 2010

ஆசிரியர் தினம் பகுதி ரெண்டு



பகுதி ஒன்றில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களை பற்றி சொன்னேன்
இங்கே ... மேல்நிலை பள்ளி சங்கர் மேல்நிலைபள்ளி , சங்கர் நகர் ..

ஆரம்ப கல்வி முடித்த பிறகு நண்பர்கள் எல்லாம் மேல்நிலைகல்விக்கு திருநெல்வேலி செல்ல என் தந்தை உருப்பிடனுமின இங்கேதான் படிக்கணும் என்று சேர்த்து விட்டார்கள்

திரு . சுந்தராமன்.என்னை ஆளாக்கியது இவர்தான் ..அத்தனை மாணவர்களுக்கு மத்தியிலும் என்னை சின்ன சின்ன செயலுக்கு பாராட்டுவார் ... இவரிடம் பாராட்டு வாங்கவே முதல் நாள் இரவு எல்லாவற்றைவும் விழுந்து விழுந்து படித்து விட்டு செல்வேன் ... "நீங்க யாரும் செல்ல மாட்டீர்கள் .. என் ஸ்டுடென் பழனிராஜ் சொல்வான் பாரு என்பர் ' அதுவே எனக்கு கிடைத்த உற்சாக டானிக் என்று எழுந்து பதில் சொன்வேன் .. அந்த போதை என்னை ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் எடுக்க செய்து பொறியில் கல்லூரியில் எடம் பெற்று தந்தது இயற்பியல் பாடம் என்றால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்று எங்களை கட்டிப்போட்டு விடும் ... இவர் எங்களுக்கு சொல்லி தருவது கடந்த ஆசிரயர் தினத்தன்று சாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் ... மிகவும் சந்தோசம் அடைந்தார் இன்றைய தினம் Boston,USA இருக்கிறார்

திரு . நவநீத கிருஷ்ணன் : எல்லோராலும் V.N.K அன்பால் அழைக்கப்பட்டார்.
பாடங்களோடு உலக நடப்பையும் சொல்லித்தந்தவர் ...

திரு . பிச்சாண்டி சார் . திருப்பு முனை திருப்பு முனை என்று எங்களை பயம் காட்டி எங்களை பத்தாம் வகுப்பில் (SSLC) நல்ல மதிப்பெண் எடுக்க வைத்தார்

திரு மகாதேவன் சார் . எனக்கு ஆங்கில ஆசிரியர் . பத்தாம் வகுப்பு ஆசிரியரும் கூட . இவர் poem நடத்துவது ஒரு தனி அழகு . அந்த poem எழுதிய ஆசிரியர் வந்தால்...இது தகுநதது poem இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள் .இனிய அளவுக்கு ரசிச்சு ரசிச்சு மெய்மறந்து சொல்லி தருவர் ( எனக்கும் பத்தாம் வகுப்பில் சிறந்த மாணவன் பரிசு தர பரிந்துரை செய்து வாங்கி தந்தார் )
.
திரு .(லேட்) விஸ்வநாதன் சார் . வேதியியல் . சிரிப்பது ரொம்ப குறைவு . ப்ளஸ் டூ மதிப்பெண் தர சொல்லி பார்த்தார் .. உனக்கு கண்டிப்பா BE SEAT உண்டு என்று தைரியம் தந்தவர்.

திருமதி .சங்கர ஆவடை அம்மாள் . விலங்கியல் . ஒரு சகோதரியை போல் பாவித்தோம் .
திரு வினி பிரெண்ட் : தாவரவியல் . ஒரு மாணவர் ஆர்வ மிகுதில் பூவின் பாகம் வரையும் போது ரெட்டை இலை வரைந்து அனைவருக்கும் செய்து விட்டார் . அப்போது அவர் சொன்னது ..அவர் கோட்டை பிடித்தார் .. நீ கோட்டை விடுவாய் "

தவிர
மேலும் செல்வி விஜய லக்ஷ்மி , திரு சங்கர நாராயணன் , திரு. சிவசுப்பிரமணியன் , திரு திருவேங்கடத்தான் , திரு அனந்த நாராயணன் சார் , மற்றும் பலரின் பகிர்ந்தளிப்பு மிகவும் குறிப்பிட தகுநதது .

.

ஆசிரியர் தினம் - பகுதி ஓன்று


செப்டெம்பர் 5 .. ஆசிரியர் தினம் ..
மாதா, பிதா, குரு , தெய்வம் ... என்று நாம் கற்றுக் கொண்ட பாடம் ..
பெற்றோர்களுக்கு அடுத்த இடம் கொடுக்க வேண்டிய தகுதியும் சிறப்பும் கொண்ட நபர் .. நானும் என்னை ஆளாக்கிய ஆசிரிய பெரும்தகைகளை இங்கு நினைவு கூறவிரும்புகிறேன்

புலவர். M. சித்திரை வேல். M.A. - எங்கள் கிராமத்தில் உள்ள இளஞ்சர்கள் கொஞ்சம் உருப்பிடு இருக்கின்றார்கள் என்றால் அதன் மூலப்பொருள் இவர்தாம்.. இவருடைய சைக்கிள் எங்கள் தெரு சைக்கிள் கடைக்கு பஞ்சர் ஓட்ட வந்தாலே .. நாங்கள் அந்த தெரு வழியாக போக பயப்பிடுவோம் ... கல்யாண வீட்டு பந்தியில பரிமாறிகொண்டிருப்போம்.. இவர் அந்த கல்யாண வீட்டுக்கு வந்திருக்கிறார் என்றால் .. பரிமாறுவதை விட்டு விட்டு ஓடிவிடுவோம் ... ....................

புத்தகத்தில்
உள்ள மனப்பட செய்யுள் தவிர நெறைய திருக்குறள்களை நடத்தி புத்தக அளவு காகிதத்தில் எழுத செய்து புத்தகத்தில் ஓட்ட செய்து மனப்பாடம் செய்ய சொல்வார் .. ...................

அந்த
குக் கிராம பள்ளிகூடத்தில் உணவு பாதை பற்றி சொல்லி கொடுக்க செத்த எலி , புறா, என்று பள்ளி வளாகத்தில் இறந்த ஜந்துக்களை போஸ்ட் மார்ட்டம் செய்து காட்டுவர் .. குளியல் சோப் , சலவை சோப் என்று எல்லாவற்றையும் செய்து பார்த்து இருக்கிறோம் ... சொந்த வாழ்க்கையிலும் சும்மா இருக்க மாட்டார் ..பள்ளி நேரம் தவிர ஊர்காவல் படையில் சேர்ந்து இரவில் ரோந்து வருவார் .. ஊர்காவல் படை சீருடையில் சூப்பரா இருப்பார்
எங்களுக்கு எல்லாம் அவர்தம் இளம் வயது ஹீரோ


ஆரம்ப
பள்ளி படிப்பு முடித்த பிறகு .. அவர் எதிர வரக்கண்டால் சைக்கிளை விட்டு கிழே எறங்கி விடுவேன் ..ஏய் .. மதிப்பு மரியாதையை மனசில இருந்தால் போதும் என்பார் ...
இன்னும் சொல்வேன் நீங்கள் சிரிக்க கூடும் ..
நெல்லை பார்வதி திரையரங்கில் மூன்றம் பிறை படம் பார்க்க உயர்ந்த வகுப்பு சீட் வாங்கி அமர்ந்தேன் .. சிறிது நேரம் கழித்து பார்த்தால் பின் சீட்டில் சார் மனவியோடு வந்து இருந்தார் .. (விடுமுறை தினத்தன்று தான் ) வணக்கம் ஒரு வைத்து விட்டு மரியாதையாக இருக்காது என்று கீழ் வகுப்பில் வந்து உக்கார்ந்து படம் பார்த்தேன்


மலை
முரசு , இந்திய சிமெண்ட்ஸ் , அப்காய் கார்பைடு பாக்டரி, பாபநாசம் அணைக்கட்டு , மணிமுத்தாறு என்று எங்கள் கால் படாத இடம் ஓன்று கிடையாது ... அங்கெல்லாம் நாங்கள் சென்று பார்த்தோம் என்றால் நாங்கள் விரல் பற்றி சென்றது இவருடையது ....


நெய்வேலி
மின் நிலையத்திற்கு ஒருமுறை சென்றோம் .. கல்லுரி படிப்பின் போது அங்கே எல்லா தலைவரின் புகைப்படத்திற்கு கீழ் அவர்கள் சொன்ன பொன் மொழி எழுதி வைத்திருந்தார்கள் .. அதில் பெரும்தலைவர் காமராஜர் புகை படத்திற்கு கீழே இருந்த வாசகம்
அடித்தளத்தில் ஒழுக்கம் இருந்தால்
அனைத்தும் சிறப்பாக அமையும்

எங்கள் அடித்தளத்தை செம்பட செய்த அந்த சிற்பி இப்ப இந்த உலகத்தில் இல்லை மிகவும் குறைந்த வயதில் இறைவனடி சேர்ந்தார் .. மாரடைப்பில் மரணம் அடைந்தார் என்று கேள்வி பட்டேன் ... குதிங்காலில்.. முள் தைத்து எடுத்த பிறகும் ஒரு காந்தானம் (எரிச்சல் ) இருக்குமே ...அப்படி ஒரு காந்தானம் என் இதயத்தில் இருந்தது ... என் குரு நாதரின் மறைவு கேட்ட பிறகு ...

ஒவ்வொரு கோடைவிடுமுறைக்கும் ஊருக்கு செல்லும் போது அந்த கோவிலுக்கு சென்று (ஸ்ரீ அய்யா சாமி ஆரம்ப உயர் தர பாடசாலை) வருவது வழக்கம் இன்றும் என்னிடம் உள்ளது

இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ...
எனக்கு ஆரம்ப பட கல்வி கற்று தந்த
திரு . ஆறுமுகம் சார் , திருமதி . சண்முக சுந்தரி சித்திரவேல் , திரு சிவராமன் சார், திருமதி. தங்கபழம் , மற்றும் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து கூறுகிறேன்

Saturday, August 28, 2010

அலைகடல்


சோம்பேறி கடல்
தூங்கிய போது ...
பனியாக உறைந்தது
பணி செய்ய விரைந்த போது
மேகமானது ...
எஞ்சி நிற்கும் இந்த எச்சம்
கையாலமையால் ..
அலைகடாலாய் ஓலமிடுகிறது

Thursday, July 15, 2010

பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம்

மாடு பிடித்த கரங்களில்
ஏடு பிடிக்க செய்த மகாராஜன்
குலக்கல்வில் நீயும் நானும்-
சீர்குலைந்து போகாமல்
குன்றின் மீது ஏற்றிய தீபமாய்
சுடர்விட செய்த
படிக்காத மேதை
கர்ம வீரர் காமராஜ் அவர்களின்
108 வது பிறந்தநாளில்
அவரை நினைவு கூர்வோம் ..!
மரங்கன்று மழையை தரும்
மகராசன் நினைவு நல்ல எதிர்காலம் தரும்

Saturday, July 3, 2010

நினைவில் நிற்கும் நெசமான தலைவர்... எங்கள் பெருந்தலைவர்




எளிமையின் பிறப்பிடம்

ஏழை பங்காளன் சொல்லின்

இலக்கணம்

ஆண்ட போது இல்லாதது

மண்டைக்கனம்
மாண்ட போது இல்லாதது
மடிக்கணம்

"கிங் மேக்கர் " பட்டம்
புகழ் பெற்றது உன்னாலே
"கர்மவீரர் " பட்டம்
பெற ஆளில்லை உன்பின்னாலே


பூகோளம் படித்தது இல்லை ..நீ !
அணைக்கட்டு ,துறைமுகம் ,
தொழிற்கூடம் துணை கொண்டு
அதற்க்கு அடையாளம் தந்தவன்
சத்திய மூர்த்தியின் சீடரே
சத்திய நெறி தவறாத குனசீலரே
K(amaraj) Plan கொண்டு
கட்சிக்கு காம்ப்ளான் தந்தவர்- அதில்
முதலமைச்சர் பதவியை துறந்து
முன்மாதிரியை திகழ்ந்தாய் ..!

பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்த
முற்பட்ட சிந்தனையாளன்
எதுகை மோனை கவிதை நடை
எதுவும் தெரியாது உனக்கு
"ஆகட்டும் பார்க்கலாம் " என்பாய்
அதை நோக்கி செயல் படுவாய் ..!


கருப்பு காந்தியே ..!
பச்சை தமிழனே ..!
உன் புகழ் பட ஒருவருக்குமில்லை
இங்கு தகுதி
உன்னை மறக்கும் ஊடகங்களும்
இங்கு மிகுதி

வாழ்நாள் முழுவதும்
வாடகை வீட்டில் வசித்தவரே ..!
எங்கள் சிந்தனையிலிருந்து உன்னை
ஏறக்க மாட்டோம் ஒருநாளும் ..
இந்த ஜூலை திங்களில் ..
இறைவா ..! ஒரு வரவேண்டும்
இவர்போல் ஒருவர் பூஉலகுக்கு தர
என பிரத்திக்றோம் ..












Tuesday, June 29, 2010

டெல்லி மெட்ரோ செக்யூரிட்டி


"Water Bottle"

"Tiffin Box"

"scooter key"

"kid's assignment print"

வீடு திரும்பும் முன்

விடு படாமல்

எடுத்து வைத்தேனா ?

எனக்கு நினைவூட்டும்

உற்ற நண்பன் ....

Wednesday, May 26, 2010

சொக்க தங்கம் தந்தாலும் ...







சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

பல்லு துலக்குவதற்கு முன்
படுக்கைக்கு போகும் வரை
பக்கத்திலிருந்து வயிறெரிய ஒரு
பங்காளி இங்கே உண்டா..?

ஆடு கறிக்கு அடிசிகிட்டு
கோழிகறிக்கு கூடிக்கொள்ளும்
அண்ணன் தம்பி இங்கே உண்டா ..?


கூட்டான் சோறு கட்டி கொண்டு
குறுக்குதுறை கோவில் போக
தாமிர பரணி ஆறு உண்டா ..?


சம்படம் நெறைய கஞ்சி வெச்சு
சாமண்டி பக்ஸ்ல இல ஊறுகா எடுத்து
நேரம் பார்த்து ஸ்கூலுக்கு போக -ஒரு
நெல்லை எக்ஸ்பிரஸ் இங்கே போறதுண்டா..?

மறுகால் வடியும் அருகன் குளம் -அதன்
மறுகரையில் குளித்து ஈர துணியோடு
கும்மிட்டு மகிழ என் குல தெய்வம்
குலசேகர ராஜா கோவில் உண்டா ..?


அரசமரத்தடியில்
அம்படையன் முடி திருத்தும் போது
முகத்தில் விழும் முடியை
முழுவதும் வெட்ட
அருகே அமர்ந்து
அதிகாரம் பண்ணும் அப்பாவை -நான்
பாத்தாலும் -அவர்
அங்கே கிடைப்பாரா ..?


சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

Wednesday, May 12, 2010

பெண்சிசு



தாலி கயிறின் நிலை கண்டு
தொட்டில் கயிறு பார்க்காமல்
தொப்புள் கொடியை
தூக்கு கயிறாக
மாட்ட துடிக்குது
தாயின் வயித்தில்
ஒரு பெண்சிசு

தாய்மை


புல் பூண்டை
கிண்டி கிளறி
புழு பூச்சியை
கொத்தி தின்னு
பொத்தி பொத்தி வளந்து
நாளுக்கு ஒரு கர்ப்பம் என
தான் இட்ட முட்டை
ஆம்லேட் ஆக
கண்டு கண்ணீர் வடித்தது
தலைகிழே தொங்கிய
தந்துரி சிக்கனின் ஆன்மா....

Monday, April 12, 2010

கழுத்துவலி


நாளெல்லாம்
கைவலி கால்வலி என
கதறியபோது கண்டுகிடாத
கொள்ளாதவள்
கழுத்துவலி என்றதும்
பதறிபோயி இரவில்
தைலம் போட்டு
தடவி விட்டாள்...
புரியாது நானும் உறங்கிவிட்டேன்
காலையில் தான் புரிந்தது
அவளுக்கு எனை அறியாமல்
தலை ஆட்ட தொடங்கிய போது

Thursday, March 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

மு .வ உரை:

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

என் குத்து மதிப்புரை
வார்டு தோறும் வாக்களர் எண்ணிக்கை
நோட்டுக்கு எத்தனை வோட்டு
அத்தனையும் கணக்கிலிட்டு
வேட்பு மனு தாக்கலிருந்து..
வெற்றி விழா வரை
உடல் வழியின்றி
உக்கார்ந்த இடத்தில் முடிப்பவனுக்கே ..
அப்பணியை தருதல் சிறந்தது

Sunday, March 14, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கலைஞர் உரை:
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


மு.வ உரை:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.


சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.


என் குத்து மதிப்புரை
கைநாட்டு கையில கரன்சி நோட்டு
கற்றவன் (பண)கஷ்ட்டத்தை காட்டிலும் மிக தொல்லை தரும்

குறளும் குத்து மதிப்பும் -குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கலைஞர் உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


மு.வ உரை:
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி தாம்பத்திய உறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

என் குத்து மதிப்புரை
கன்னி ஒருத்தி
கைக்குழந்தை அழுக்கை போக்க
தாய்பால் கொடுக்க முயற்சிப்பது போல்

குறளும் குத்து மதிப்பும் -குறள் 958:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

கலைஞர் உரை:
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.


மு.வ உரை:
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.


சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.


என் குத்து மதிப்புரை
பில்டிங்கு ஸ்ட்ராங்கு
பேஸ்மென்ட் கொஞ்சம் வீக் எனும்
கட்டடங்கள் உங்கள் நிலத்தில் ஒரு
பேயிங் கெஸ்ட் (paying guest)

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.


கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.


மு.வ உரை:

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.


என் குத்து மதிப்புரை
காதலுக்கு வித்திட்ட கண்கள் அதை இன்று கண்ணீர் ஊற்றி வளர்கின்றனவோ ...

Saturday, March 13, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.


மு.வ உரை:

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.


சாலமன் பாப்பையா உரை:

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.


என் குத்து மதிப்புரை
என்ன ஒரு இரத்தின சுருக்கமான உரை .
விவசாய கல்லுரி மாணவன்
"சாகுபடியை பெருக்க என்ன வழி முறை?"
என்றால் இதை பிட்டெழுதி எடுத்துகிட்டு
போனா முழு மதிப்பெண் கிடைச்சுவிடும்

குறளும் குத்து மதிப்பும் குறள் எண்160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.


சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.


என் குத்து மதிப்புரை :
"தட்டுல சாதம்
போடும் முன்னே -கழுத!
உன் கச்சேரியும் ஆரம்பம்" என
நீயும் வேணாம்
உன் சோறும் வேணாம் என
வயித்தில் ஓடும்
ஓணானோடு திண்ணையில்
பட்னி கிடக்கும் விருமாண்டியை காட்டிலும்
தினமும் நடக்கும் கச்சேரி என
தின்னு முடிச்சு தட்டில் முகம்

காணும் கணவனே சிறந்தவன்

Friday, March 12, 2010

குறளும் குத்து மதிப்பு -குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கலைஞர் உரை:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.


மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


சாலமன் பாப்பையா உரை:
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.


என் குத்து மதிப்புரை
ஊரைக் கூட்டி நீ
கும்பிடும் குரு
மான் தோல் உடுத்தி
புலித்தோல் மீது
அமராது தரிசனம் தந்தால்
அவர் கரிசனத்திற்கு
வன விலங்குகளும் அவரை
வணங்கும் எந்நாளும் ..
..

Thursday, March 11, 2010

குறளும் குத்து மதிப்பும் குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.


மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.


சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.


என் குத்து மதிப்புரை
கல்லறையில் போறவன்
கற்பககிரகத்தில் ஆடிய
ஆட்டம் ...
நாசக்கரா !
நாத்திகனின் நகைப்புக்கு
ஆளாக்கிவிட்டாயே என
காத்ததோணும்

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

கலைஞர் உரை: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வ உரை: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

என் குத்து மதிப்புரை
வாங்குகிற பொருளுக்கெல்லாம்
warrenty உண்டு மாத கணக்கில் -இந்த
வரதட்ஷ்ணையில் வந்தவருக்கோ
ஒரு கேரண்டியும் இல்லை வருடகணக்கில்
" Use and throw " என்று
உதறி தள்ள இவரோன்றும்
சைனா சாமான் அல்ல
எங்க நாயின வாங்கி தந்த மாப்பிள்ளை

Wednesday, March 10, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 927:

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.


கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.


மு.வ உரை:

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.


சாலமன் பாப்பையா உரை:

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.


என் குத்து மதிப்புரை
ஒரு குவாட்டர் அடிச்சு

இவன் எடுத்த வாந்தி
இவனுக்கு மட்டும் தெரியும்
யாருக்கும் தெரியாது.....
ஒரு full அடிச்சு
இவன் எடுத்த வாந்தி
ஊருக்கே தெரியும்
இவனுக்கு மட்டும் தெரியாது ...

Sunday, March 7, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

கலைஞர் உரை:
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

மு.வ உரை:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

என் குத்து மதிப்புரை
காலையில் அடுத்தவன்
காலை வாரிவிட்டால் ..
மாலையில் மாலையோடு
வரமாட்டன் ..
வாளை எடுத்து வருவான் உன்
வாலை நாறுக்க

குறளும் குத்து மதிப்பும் - குறள் 181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.



மு.வ : ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

என் குத்து மதிப்புரை
ஒண்ணுமே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை
"போட்டு கொடுக்க " கூடாது ..

குறளும் குத்து மதிப்பும் -குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்

பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.


என் குத்து மதிப்புரை
இணைந்து வாழ்ந்தால் பூவுலகில் சொர்க்கம்
இறந்த பின்பும் மேலோகதிலும் சொர்க்கம்

Saturday, March 6, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் எண்- 116:


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

மு.வ உரை:

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

குத்து மதிப்புரை
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
கேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் முன்னே

குறளும் குத்து மதிப்பு - குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வ உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

என் குத்து மதிப்புரை:
எதிர்க்கட்சி , கூட்டணி கட்சி,
தன்கட்சி அதன் உட்கோஷ்டி..
எல்லாத்தையும் ஆராயிந்து ...
டெப்பாசிட் இழக்க
ஒரு இழிச்சவாயன்
வேட்பாளர் கிடைக்காத நிலையில்
தேர்தலில் யாருக்கும்
ஆதரவு இல்லை என்று
தேர்தலை புறக்கணிக்கலாம்

Friday, March 5, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 1247: )

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.

கலைஞர் உரை:
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

மு.வ உரை:

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

குத்து மதிப்புரை
முட்டையும் உடைய கூடாது ...ஆம்லெட்டும் சாப்பிடணும் ..ரெண்டும் எப்படி கண்ணு ..சரியாத வெளங்காத ..கூமுட்டை புள்ள நீ ..!

Thursday, March 4, 2010

'மெகா ஹிட் திரை படம் "

ஓயாமல் உச்சரிக்கும்
உன் பெயர் ..கவிதை
உன் முகம் காட்டும்
ஜன்னல் .. சின்ன திரை
நீ அசைந்து வரும்
காட்சி - குறும்படம்
கனவில் உன் தோன்றல்
களவாட முடியாத குறுந்தகடு
எப்பவும் நீயே
என் 'மெகா ஹிட் திரை படம் "

குறளும் குத்து மதிப்பும் (குறள் 834:)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கலைஞர் உரை:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.


மு.வ உரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.


சாலமன் பாப்பையா உரை:
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.


என் குத்து மதிப்பு

'கழிப்பிடத்திற்கு வெளியே
கழிக்காதே சிறுநீர்'
என்ற வாசகம்
சுமந்து நிற்கும்
சுவர் மீதே ..அதை
வசித்து கொண்டே
காரியம் முடிக்கும்
கயவான்கள் -இதில்
கால்நடை காட்டிலும்
"கழிசல்கள் "

Wednesday, March 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 271 )

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


கலைஞர் உரை:
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


மு.வ உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.


சாலமன் பாப்பையா உரை:

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.


என் குத்து மதிப்பு
"கதவைத் திறந்து விடுங்கள்
காற்று வரட்டும் " என
ஒழுக்க சீலர் போல்
ஊரெங்கும் உபதேசம் ...
அறையில் புரியும் இவரின்
அந்தரங்க லீலையாவும்
ஊடகம் வழி
உலகத்தை சிரிக்க வைக்கும்

Sunday, February 28, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 398: )


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


கலைஞர் உரை:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

என் குத்து மதிப்பு
என்ன ... இத படிச்சுட்டு தான் ...

டாக்டர் புள்ள டாக்டர் ...
எஞ்சினியர் புள்ள எஞ்சினியர் ...
சொல்றகளோ ..?
அந்த காலத்துல ...

படமுறையில சிலபஸ் ...
மாத்தவே மட்டங்க போலிருக்கு ...
ஏழு தலைமுறைக்கு வரும் போலிருக்கு ..!
வக்கீலுக்கு நல்ல பொருந்துமோ ..?


Thursday, February 25, 2010

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

கலைஞர் உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.

மு.வ உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

என் குத்து மதிப்பு :
இறை வணக்கத்திலிருந்து
இறுதில் பாடும் தேசிய கிதம்
முடிவும் வரை ..
எழுதி எடுத்து சென்ற உரையை
வசித்து முடித்த பின்பு
வாய்மூடி மௌனிய இருத்தல்
வானளவு புகழ் சேர்க்கும்

Wednesday, February 24, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 560 )

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.


சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.


என் குத்து மதிப்பு
பாராளும் ஆட்சி பாரட்டுவிதமாக இல்லையேல்
"பாருக்குள்" இருந்து குடிப்பான் குடிமகன்
பால் குடிப்பதறியான் அவன் மகன்
கலர் T.V யோ கவலையை பறக்கடிக்கும்
கல்வியையும் துரத்தியடிக்கும்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 696)

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.


மு.வ உரை:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.


சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதிய செய்திக்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.


என் குத்து மதிப்பு
அடிக்கிற அடியில
காது செவிப்பறை கிழியவேணும்...
அந்த அளவுக்கு அசத்தணும்..
ஜால்ரா சத்தம்

பிறந்த நாள்

பருத்து வரும்
பூத உடலை சுமந்து அது
சிக்கென சிக்ஸ் பேக்
கொண்ட நாளை
எண்ணி எண்ணி
கவலையோடு
கரவொலிகளுக்கு நடுவே
விடும் பெரும்மூச்சில்
மெழுக்கு வர்த்தியை
அணைக்கும் நாள்

தமிழ் மாப்பிள்ளை

வந்த இடத்தில
வாயுக்கோளறு என்று
வாங்கி குடிச்சான் ஒரு
சோடா மாமனார் செலவில்
முதல் மாப்பிள்ளை ......


தனக்கும் ஓன்று வேண்டுமென
தகவல் சொல்லி அனுப்பினான்
ரெண்டாம் மாப்பிள்ளை......

Saturday, February 13, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் என் 1102: )

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

கலைஞர் உரை: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

மு.வ உரை: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

குத்து மதிப்பு:
கல்யாணம் முடிந்த பிறகு நோய் தான் இருக்கும் மருந்துக்கு expiry date முடிஞ்சு போயிருக்கும் .. உனக்கும் எதிர்ப்பு சக்தி குறைஞ்சி போயிருக்கும்

குறளும் குத்து மதிப்பும் குறள் 1108:

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.


கலைஞர் உரை:
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.


மு.வ உரை:

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.


சாலமன் பாப்பையா உரை:

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.


பழனிராஜியின் குத்து மதிப்பு
ஓகோ ..

மெட்ரோ ரெயில்லயும் ..
சிட்டி பஸ்லையும் -எழுந்து
இருக்கை தந்தாலும்
இருக்க மறுத்து
மறந்த நிலையில
பேசிக்கொண்டு இருக்கிறார்களே ..?
இதுதான் விஷயமா ..?
உயரமான வள்ளுவன் சிலையை
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
மெரினா கடற்கரையில் நிறுவியிருக்க வேண்டும் ..
கீழே நடக்கும் இந்த விசயங்கள்
நெறைய எழுதி இருப்பார்

குறளும் குத்து மதிப்பும் (குறள் 118 )

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.


சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

குத்து மதிப்பு :
என்னதான் நீ ..!

ஒரு பக்கமா பிடிச்சு வச்சாலும் ...
ஆடி ஆடி

ஆமாம் சாமி போடுவது போலிருந்து
கடைசில் நேர நிமித்து
நிக்கும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ...
சம நிலையை அடைவர் சான்றோராகிய நீதிபதிகள்

Wednesday, February 10, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 594)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

கலைஞர் உரை: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

மு.வ உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.


சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.


பழனி ராஜியின் குத்துமதிப்பு :
அசையா சொத்தெல்லாம் (immovable properties )
அசையா நிலையான
ஊக்கம் உடையவனிடத்தில் வந்து சேரும் ...
ஊக்கமுடன் ஓரிடத்தில்
இருந்து வட்டி வாங்கும்
மார்வாடி முதல் இடம் பெறுவார்

Monday, February 8, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் :1 )

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பழனிராஜியின் குத்து மதிப்பு :
சுழலும் கோள்கள் -அவை
சுற்றி சுற்றி வர ஒரு
சூரியன் ..
உனக்கும் ஒரு உயிர்
அதை சுமக்க ஒரு மெய்
தொகுத்து தந்தவனை
இறைவன் என்பாயா..?
பகுதறிவாலே
இல்லை என்பாயா..?

Sunday, February 7, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் ; 599)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


மு.வ உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.


சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


குத்து மதிப்பு :
ஆபிசில எல்லாத்தையும் அடக்கியாளும் பெரிய பாஸு..
அந்தியில் அம்மையாரிடம் அடங்கி போகும் வெறும் புஸ்ஸு

முந்தானையால் உதறி தட்டிவிடும் தூசு

Saturday, February 6, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :127)

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என் குத்து மதிப்பு
காவலுக்கு வெச்ச நாயி கடிச்சா உனக்கு 'ரேபிஸ்' -உன்
காக்காத "நா" கடிச்சா மவனே.... நீ ! "பீஸ் பீஸ்"
இரண்டு இன்ச் நாவை கட்டு இல்ல
உடம்பு முழுசும் மாவு கட்டு

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 619 )

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

குத்துமதிப்பு :
இறைவனும் பாவம்

படியரிசி தான் அளப்பார்
சோம்பேறிய இருப்பவனுக்கு
சோறு ஆக்கமுடியாது அவரால் ..
FAST FOOD ஓட்டல் நடத்தி
HOME DELIVERY பண்ணுவதுதில்லை அவர்
உன் உழைப்புக்கு ஏத்த ஊதியம்
தரும் முதலாளி
அரை நாள் வேலை
அரை நாள் சம்பளம்
STEPS க்கு மதிப்பெண் தரும் ஆசிரியர்
"உழைப்புக்கு ஏற்ற கூலி -அதுக்கு
நீ செய்யவேணும் முயற்சி "

Friday, February 5, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 72 )

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வார்

சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

குத்து மதிப்பு : ஈகை என்பதை நகை என்று பொருள்கொண்டு தனது அம்மணத்தை அது கொண்டு மறைப்பவர் அன்பிலார் ..அன்புடையாரோ ..தனது உடலும் தானமாக தந்து இறந்தபினும் ஜோதியாய் திகழ்வார் ..அவர் புகழே.. என்றும் நறுமணம் கமழும்..

Thursday, February 4, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 90 )

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

ப. பழனி ராஜியின் குத்துமதிப்பு : நீ உக்கார்ந்து இருக்கும்வரை தான் புல்தரை ..எழுந்து அதுமேல் நடந்தால் கட்டாந்தரை

Wednesday, February 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 1242)

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

* மு.வ : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

* சாலமன் பாப்பையா : என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

குத்து மதிப்பு:
பாவம் அந்த பையன் ..!
பதவி உயர்வு இல்லை என்று
மறந்தாப்ல உன் வீட்டுக்கு
மறுபடிவும் வந்துவிட்டால் ...
காதல் என்று
கணக்கு போடுவது
என்ன நியாயம் ..?
சேல்ஸ் மேனுக்கு
சிரித்த முகம் தானே மூலதனம் ..
இதை அறியாதது உன் மூடத்தனம்

Monday, February 1, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 478)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

* சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

பழனி ராஜ் : வங்கி கணக்கில் இருப்பு இல்லாத போது "ATM ..OUT OF SERVICE " என்றல் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 33)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.(குறள் எண் :33)

* மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

* சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

பழனி ராஜியின் குத்து மதிப்பு : தபால் நிலையத்தில் அந்த முதியவருக்கு அஞ்சல் தலை வாங்க காசு கொடுக்க வேணாம் ... அதை ஓட்ட "பசை டப்பா" நாலு கவுன்ட்டர் தள்ளி இருக்கும் எடுத்து வந்து கனிவா ஒட்டி தபால் பெட்டியில் போடு ..

Sunday, January 31, 2010

குறளும் குத்துமதிப்பும் (குறள் எண் :478)

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.


* மு.வ : பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

* சாலமன் பாப்பையா : வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

குத்து மதிப்புரை by பழனி ராஜ் : வங்கி கணக்கில் இருப்பு இல்லாத போது "ATM ..OUT OF SERVICE " என்றல் ஒன்றும் குடி மூழ்கி போய்விடாது

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் : 50)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

குத்து மதிப்பு
***************
பூக்களை தொடுக்க நார் வேணும்
தங்கத்தை இழைக்க தாமிரம் வேணும் .. ஆனால்
இந்த குறளும் குத்துமதிப்பு எழுத வார்த்தைகளே வேணாம்
அந்த மனிதர்களில் மாணிக்கங்களை கூறுகிறேன்

மதிப்புரை தேவையில்லை
கு. காமராஜ் , ஜீவா ,கக்கன், அன்னை தெரசா, அப்துல் கலாம், இன்னும் பல

குறளும் குத்துமதிப்பு (குறள் எண் : 69)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

கலைஞ்சர் .மு. கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்

குத்து மதிப்பு
எத்தனையோ ஜட்டி
ஈரமாக்கிய உடனேயே மாத்தி
கொஞ்சி மகிழ்ந்த குழந்தைக்கு
உடுத்த மாத்து இல்லாது -இப்ப
ஒரே ஜட்டியில் ஊரெல்லாம்
சுற்றி வரும் நிலையிலும்
ஆனந்த கண்ணீர் வடிக்கும்
..................................தாய்..
சூப்பர் மெனின் தாய்

Saturday, January 30, 2010

குறளும் குத்து மதிப்பும் (எண் ; 1033 )

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

குத்து மதிப்பு

வான் மேகம்
இவனின் Top Boss
வரப்பு வயலெல்லாம்
இவனின் Desk Top
ஏர்முனை கொண்டு
இவன் எழுதும் system
விண்டோஸ் ஐ மிஞ்சும்
Operating Sytem

ப. பழனி ராஜ்

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண்: 70)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை
என் நோற்றான் கொல்’ எனும் சொல்.
குத்து மதிப்பு
"புகை"யுமில்லை இவனுக்கு "பகை'யுமில்லை
"தண்ணி'யுமில்லை எந்த "கன்னி"யுமில்லை
இவன் தலையெடுக்க ஆரபிச்ச பிறகு
இவன் அப்பகாரன் தலை நிமிர ஆரபிச்சன்னு
உன் பங்காளி வயிறு எரியணும்...
ப. பழனி ராஜ்