Friday, January 14, 2011

விசு பாணியில் ஒரு குசும்பு


மன்மத அம்பு படத்தில் கமல் கவிதை சர்ச்சைக்கு இடமாகிவிட்ட நிலையில்அதை விசு பாணியில் ஒரு கற்பனை கலந்து பொங்கல் வைத்துள்ளேன்
கன்னி :
கதவை தட்டும் போது
கால தாமதம் ஏன் என்றால்
கச்சேரி வழக்கமானது தான் எச்சரிக்கை

சாம்பாரோடு ரசம் கலந்தால்
நேத்தைய மீதம் எச்சரிக்கை

தேனீர் தரும் போது
டேபிளை தட்டினால்
சூடு குறைவு எச்சரிக்கை (உனக்கும்தான் )
டேபிளில் தேனீர் சிந்திவிடுமாயின்
ரோஷம் கொள்ளாதே நீ எச்சரிக்கை

உங்கம்மவோடு ஓவர உறவாடினால்
ஊரிலிருந்து உன்மச்சன்
உன்வீட்டில் தங்க வருகிறான் - எச்சரிக்கை

உன் கல்யாண வேட்டி சட்டையை அணிந்து
கடை தெருவில் வலம் வந்தானா?
உன் துணிமணி எல்லாம் ஓன்று விடாமல்
அழுக்கு ஆக்கிவிட்டு இருப்பன் - எச்சரிக்கை

இதனையும் எதிர்கொள்ளும் நிலை ஏன் உனக்கு
அப்பன் சொன்ன பெண்ணை
அப்படியே எத்துக் கொள்வதனாலோ ...?
உன்னைப்பற்றி நண்பர்கள் என்னென சொல்லவர்
யோசிச்சி கொஞ்சம் முடிவு செய் !

காளை:

பந்தாவா சுத்திவர ஒரு பைக்கு
பக்கத்தில் அவளைவைத்து வர
சொகுசாக ஒரு காரும் வேண்டும்
எந்த நேரமும் எரிபொருள் நிரப்ப
வங்கி இருப்போடு டெபிட் கார்டு வேண்டும்
பளிங்கு தரை கொண்ட பங்களா
இத்தனையும் வரதட்சணையில் பெற்று தர
எங்க அப்பனுக்கு ஒரு சமுதாய அந்தஸ்து வேண்டி
குளத்தான்கரை பிள்ளையாரை வேண்டினேன்


கன்னி :
வரனுக்கு சீர் என்று
வாங்க முடிவு செய்தபின்
மான மரியாதை எதற்கு ?
வீட்டோடு மாப்பிள்ளையாகலாம்
பிறவி எடுத்ததே அதற்க்கு


3 comments:

  1. அநியாயமா நல்லா இருக்கேப்பா!!!

    ReplyDelete
  2. ithu nalla irukku.. aanal manmathan ambu la vara sarchaikkullaana paadal ethu endru therinthaal innum nalla rasikkalaamnu nenaikkiren...

    ReplyDelete