Tuesday, February 1, 2011

8 வது ஆண்டு நினைவு அஞ்சலி

தெய்வ திரு .நா.பழனிவேல்
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ,கரையிருப்பு
2.2.2003

பேரன்பால் என் ஆருயிர் அண்ணன்
வழிகாட்டலில் சாரதி கண்ணன்
பிறன் பொருள் நாடா நெஞ்சம்
இறைவழிபாடு ஒன்றே அவர் கொண்ட தஞ்சம்
ஏழ்மையிலும் பிறர் உங்கள் நிலை கண்டு
எள்ளி நகையடியபோது
கலங்கியது இல்லை- நீங்கள்
உங்கள் தோள்களில் ஏறி
உயரம் கொண்டோம் -
உங்கள் புன்சிரிப்பில் திழைத்து
துயரம் ஏது கண்டோம் ..
நிழலாய் நீங்கள் பின் தொடர்ந்தால்
கனலாய் வரும் துன்பம் யாவும் நீங்கும்
கோழையாய் ஒரு நாளும்
அழமாட்டேன் ...
சிந்தனையில் உங்களை
சுமந்து சிரித்து வாழுகிறேன் -இன்று
கண்ணீரை தடுக்க முடியாமல்