Tuesday, March 6, 2012

அப்பா




அறியா பருவத்திலும்
அன்னை மீது பாசம் ..
எல்லோருக்கும் உள்ளது -அது
எனக்கு கொஞ்சம் அதிகம்
கோவில் பிரசாதமாகட்டும் ...
குடியரசு தின இனிப்பாகட்டும்
கூட்டுகுடும்பத்தில்
குனிந்த தலை நிமிராத அன்னைக்கு
அப்பாவும் அறியாவண்ணம்
அருகே சென்று தருவாதுண்டாம் ..
சுட்டித்தனத்தை எல்லாம்
சொல்லி சொல்லி மகிழ்வார்
என் தந்தை ...
இன்று என் பிள்ளை
என்னையும் மிஞ்சுகிறான்
தாய் பாசத்தில் ...
வியப்பதற்கென்ன என
வினவத்தோணும்....
என்னுள் என்ன ஊனம் ?
என்னைவிட அவள்மீது
பாசம் ......!
அன்று என் அப்பாவுக்கு
இன்று என்றேன் நிலை எண்ணி
அழத்தோணும்....
அப்பா என்னை தூக்கிவிட்ட
உங்கள் தோள்கள் வேண்டும் ..
என் முகம் புதைத்து நான் அழவேண்டும் ..!