Wednesday, November 16, 2011

எழந்த பழம்


இந்தா இந்தா .. இதுபோல்
எழந்த பழம் கண்டதுண்டா ..?
உப்புத் தடவி தாரேன் ..
சப்புக் கொட்டுவே பாரு
காடு புதரில் கனிந்த கனி
கையை காயம் படுத்தி பறித்தது
இந்த கன்னி...
நொறுக்கு தீனிக்கு
நேட்டை வீசும் கனவான்களே..!
எட்டி நின்னு வேடிக்கை வேணாம்
துட்டு நீட்டி வாடிக்கை ஆகணும்

No comments:

Post a Comment