Monday, February 27, 2012

மத நல்லிணக்கம்

தொந்தி பிள்ளையாருக்கு
தோப்புக்கரணம் நூறு போட்டு
பாஸ்மார்க் எடுத்தவனை
விடியலுக்கு முன் எழுப்பி
படிக்கவைத்தது ...
மாதாக்கோவில் மணியோசை ...

Thursday, February 23, 2012

தவம்

உருவெடுத்த தாயின் கருவறையும்
உயர்வு கொடுத்த தந்தையின் தோள்ப்பட்டையும்
கல்வி தந்த குருகுலமும்- என்
நலம்விரும்பிய நட்புபலமும்
என்னில் கலந்த வாழ்க்கை துணையும்
நெஞ்சை நிமிரச்செய்யும் பிள்ளைகளையும்
எள்ளும் குறைவிலா ..
எண்ணற்ற பிறவிகள்
இந்திய மண்ணில்
தமிழனாய் பிறந்திட
தவமிருப்பேன் ....