Saturday, September 4, 2010

ஆசிரியர் தினம் பகுதி ரெண்டு



பகுதி ஒன்றில் ஆரம்ப கல்வி ஆசிரியர்களை பற்றி சொன்னேன்
இங்கே ... மேல்நிலை பள்ளி சங்கர் மேல்நிலைபள்ளி , சங்கர் நகர் ..

ஆரம்ப கல்வி முடித்த பிறகு நண்பர்கள் எல்லாம் மேல்நிலைகல்விக்கு திருநெல்வேலி செல்ல என் தந்தை உருப்பிடனுமின இங்கேதான் படிக்கணும் என்று சேர்த்து விட்டார்கள்

திரு . சுந்தராமன்.என்னை ஆளாக்கியது இவர்தான் ..அத்தனை மாணவர்களுக்கு மத்தியிலும் என்னை சின்ன சின்ன செயலுக்கு பாராட்டுவார் ... இவரிடம் பாராட்டு வாங்கவே முதல் நாள் இரவு எல்லாவற்றைவும் விழுந்து விழுந்து படித்து விட்டு செல்வேன் ... "நீங்க யாரும் செல்ல மாட்டீர்கள் .. என் ஸ்டுடென் பழனிராஜ் சொல்வான் பாரு என்பர் ' அதுவே எனக்கு கிடைத்த உற்சாக டானிக் என்று எழுந்து பதில் சொன்வேன் .. அந்த போதை என்னை ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் எடுக்க செய்து பொறியில் கல்லூரியில் எடம் பெற்று தந்தது இயற்பியல் பாடம் என்றால் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்று எங்களை கட்டிப்போட்டு விடும் ... இவர் எங்களுக்கு சொல்லி தருவது கடந்த ஆசிரயர் தினத்தன்று சாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் ... மிகவும் சந்தோசம் அடைந்தார் இன்றைய தினம் Boston,USA இருக்கிறார்

திரு . நவநீத கிருஷ்ணன் : எல்லோராலும் V.N.K அன்பால் அழைக்கப்பட்டார்.
பாடங்களோடு உலக நடப்பையும் சொல்லித்தந்தவர் ...

திரு . பிச்சாண்டி சார் . திருப்பு முனை திருப்பு முனை என்று எங்களை பயம் காட்டி எங்களை பத்தாம் வகுப்பில் (SSLC) நல்ல மதிப்பெண் எடுக்க வைத்தார்

திரு மகாதேவன் சார் . எனக்கு ஆங்கில ஆசிரியர் . பத்தாம் வகுப்பு ஆசிரியரும் கூட . இவர் poem நடத்துவது ஒரு தனி அழகு . அந்த poem எழுதிய ஆசிரியர் வந்தால்...இது தகுநதது poem இனிய ஆசிரயர் தின வாழ்த்துக்கள் .இனிய அளவுக்கு ரசிச்சு ரசிச்சு மெய்மறந்து சொல்லி தருவர் ( எனக்கும் பத்தாம் வகுப்பில் சிறந்த மாணவன் பரிசு தர பரிந்துரை செய்து வாங்கி தந்தார் )
.
திரு .(லேட்) விஸ்வநாதன் சார் . வேதியியல் . சிரிப்பது ரொம்ப குறைவு . ப்ளஸ் டூ மதிப்பெண் தர சொல்லி பார்த்தார் .. உனக்கு கண்டிப்பா BE SEAT உண்டு என்று தைரியம் தந்தவர்.

திருமதி .சங்கர ஆவடை அம்மாள் . விலங்கியல் . ஒரு சகோதரியை போல் பாவித்தோம் .
திரு வினி பிரெண்ட் : தாவரவியல் . ஒரு மாணவர் ஆர்வ மிகுதில் பூவின் பாகம் வரையும் போது ரெட்டை இலை வரைந்து அனைவருக்கும் செய்து விட்டார் . அப்போது அவர் சொன்னது ..அவர் கோட்டை பிடித்தார் .. நீ கோட்டை விடுவாய் "

தவிர
மேலும் செல்வி விஜய லக்ஷ்மி , திரு சங்கர நாராயணன் , திரு. சிவசுப்பிரமணியன் , திரு திருவேங்கடத்தான் , திரு அனந்த நாராயணன் சார் , மற்றும் பலரின் பகிர்ந்தளிப்பு மிகவும் குறிப்பிட தகுநதது .

.

No comments:

Post a Comment