Saturday, August 28, 2010

அலைகடல்


சோம்பேறி கடல்
தூங்கிய போது ...
பனியாக உறைந்தது
பணி செய்ய விரைந்த போது
மேகமானது ...
எஞ்சி நிற்கும் இந்த எச்சம்
கையாலமையால் ..
அலைகடாலாய் ஓலமிடுகிறது

Thursday, July 15, 2010

பெருந்தலைவர் காமராஜ் பிறந்த தினம்

மாடு பிடித்த கரங்களில்
ஏடு பிடிக்க செய்த மகாராஜன்
குலக்கல்வில் நீயும் நானும்-
சீர்குலைந்து போகாமல்
குன்றின் மீது ஏற்றிய தீபமாய்
சுடர்விட செய்த
படிக்காத மேதை
கர்ம வீரர் காமராஜ் அவர்களின்
108 வது பிறந்தநாளில்
அவரை நினைவு கூர்வோம் ..!
மரங்கன்று மழையை தரும்
மகராசன் நினைவு நல்ல எதிர்காலம் தரும்

Saturday, July 3, 2010

நினைவில் நிற்கும் நெசமான தலைவர்... எங்கள் பெருந்தலைவர்




எளிமையின் பிறப்பிடம்

ஏழை பங்காளன் சொல்லின்

இலக்கணம்

ஆண்ட போது இல்லாதது

மண்டைக்கனம்
மாண்ட போது இல்லாதது
மடிக்கணம்

"கிங் மேக்கர் " பட்டம்
புகழ் பெற்றது உன்னாலே
"கர்மவீரர் " பட்டம்
பெற ஆளில்லை உன்பின்னாலே


பூகோளம் படித்தது இல்லை ..நீ !
அணைக்கட்டு ,துறைமுகம் ,
தொழிற்கூடம் துணை கொண்டு
அதற்க்கு அடையாளம் தந்தவன்
சத்திய மூர்த்தியின் சீடரே
சத்திய நெறி தவறாத குனசீலரே
K(amaraj) Plan கொண்டு
கட்சிக்கு காம்ப்ளான் தந்தவர்- அதில்
முதலமைச்சர் பதவியை துறந்து
முன்மாதிரியை திகழ்ந்தாய் ..!

பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்த
முற்பட்ட சிந்தனையாளன்
எதுகை மோனை கவிதை நடை
எதுவும் தெரியாது உனக்கு
"ஆகட்டும் பார்க்கலாம் " என்பாய்
அதை நோக்கி செயல் படுவாய் ..!


கருப்பு காந்தியே ..!
பச்சை தமிழனே ..!
உன் புகழ் பட ஒருவருக்குமில்லை
இங்கு தகுதி
உன்னை மறக்கும் ஊடகங்களும்
இங்கு மிகுதி

வாழ்நாள் முழுவதும்
வாடகை வீட்டில் வசித்தவரே ..!
எங்கள் சிந்தனையிலிருந்து உன்னை
ஏறக்க மாட்டோம் ஒருநாளும் ..
இந்த ஜூலை திங்களில் ..
இறைவா ..! ஒரு வரவேண்டும்
இவர்போல் ஒருவர் பூஉலகுக்கு தர
என பிரத்திக்றோம் ..












Tuesday, June 29, 2010

டெல்லி மெட்ரோ செக்யூரிட்டி


"Water Bottle"

"Tiffin Box"

"scooter key"

"kid's assignment print"

வீடு திரும்பும் முன்

விடு படாமல்

எடுத்து வைத்தேனா ?

எனக்கு நினைவூட்டும்

உற்ற நண்பன் ....

Wednesday, May 26, 2010

சொக்க தங்கம் தந்தாலும் ...







சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

பல்லு துலக்குவதற்கு முன்
படுக்கைக்கு போகும் வரை
பக்கத்திலிருந்து வயிறெரிய ஒரு
பங்காளி இங்கே உண்டா..?

ஆடு கறிக்கு அடிசிகிட்டு
கோழிகறிக்கு கூடிக்கொள்ளும்
அண்ணன் தம்பி இங்கே உண்டா ..?


கூட்டான் சோறு கட்டி கொண்டு
குறுக்குதுறை கோவில் போக
தாமிர பரணி ஆறு உண்டா ..?


சம்படம் நெறைய கஞ்சி வெச்சு
சாமண்டி பக்ஸ்ல இல ஊறுகா எடுத்து
நேரம் பார்த்து ஸ்கூலுக்கு போக -ஒரு
நெல்லை எக்ஸ்பிரஸ் இங்கே போறதுண்டா..?

மறுகால் வடியும் அருகன் குளம் -அதன்
மறுகரையில் குளித்து ஈர துணியோடு
கும்மிட்டு மகிழ என் குல தெய்வம்
குலசேகர ராஜா கோவில் உண்டா ..?


அரசமரத்தடியில்
அம்படையன் முடி திருத்தும் போது
முகத்தில் விழும் முடியை
முழுவதும் வெட்ட
அருகே அமர்ந்து
அதிகாரம் பண்ணும் அப்பாவை -நான்
பாத்தாலும் -அவர்
அங்கே கிடைப்பாரா ..?


சொக்க தங்கம் தந்தாலும்
சொந்த ஊரு போல வருமா

Wednesday, May 12, 2010

பெண்சிசு



தாலி கயிறின் நிலை கண்டு
தொட்டில் கயிறு பார்க்காமல்
தொப்புள் கொடியை
தூக்கு கயிறாக
மாட்ட துடிக்குது
தாயின் வயித்தில்
ஒரு பெண்சிசு

தாய்மை


புல் பூண்டை
கிண்டி கிளறி
புழு பூச்சியை
கொத்தி தின்னு
பொத்தி பொத்தி வளந்து
நாளுக்கு ஒரு கர்ப்பம் என
தான் இட்ட முட்டை
ஆம்லேட் ஆக
கண்டு கண்ணீர் வடித்தது
தலைகிழே தொங்கிய
தந்துரி சிக்கனின் ஆன்மா....