Thursday, January 21, 2010

பிஞ்சு மனம்


பட படத்த காற்று
பக்கம் நின்ற
பாப்பாவின் பலூனை
பறித்து உயரே சென்றது
அங்கே ..
அடைபட்டு கொண்டிருக்கும்
தான் சேயை விடுவிக்க ...

விடுதலை பெற்ற
குஞ்சு தாயோடு பறக்க
சுருங்கி போனது பலூன்
அந்த பிஞ்சு மனம் போல ..



Monday, January 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 788 )

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
( குறள் எண் : 788 )
மு.வ : உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா : பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
பழனி ராஜ் : நீ...! ஜெயிலுனு போகும் முன் பெயிலு எடுத்துட்டு வருவது நட்பு

Sunday, January 17, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 433 )

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

மு.வ : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
சாலமன் பாப்பையா : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.
பழனி ராஜ் : காலை தவறுதலாக மிதித்துக்கே "கட்அவுட்" வைத்து மன்னிப்பு வேண்டி நாணுவர் ..
ஸாரி என்று சொன்னாலே சரியா போகிவிடும் .. அதுக்கு விம்மி விம்மி அழுது விங்கி போய்விடுவர் பெரியோர்

Friday, January 15, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 656 )

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.



மு.வ : பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

சாலமன் பாப்பையா : தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.

பழனிராஜ் : அம்மாவுக்கு பசிச்சாலும் சும்மா இருந்தாலும் இருக்கலாம் ...மற்றவர்கள் "அம்மடியோவு' என்னும் செயலை செயக்கூடாது

பழ மொழி ஒரு ஆராய்ச்சி

" தம்பி உடையன் படைக்கு அஞ்சான்"
இந்த பழமொழி எப்படி வந்தது தெரியுமா ..?
யாருக்கு உடன் பிறந்த தம்பி இருக்காங்களோ ..
அவன் பிறந்த நாள் முதல்
" தின்கிற பண்டதிலிருந்து..உடுத்துற துணியிலும்
படுகிற தலையணையிலும் 'எனது எனது'
என்று ஒரு உள்நாட்டு போர் செய்து பயிற்சி"
இருப்பதால் ..
வெளிய ஒரு தகராறு வந்தால் ..
சண்டைக்கு அஞ்ச மாட்டன்
என்ன புரிஞ்சுதா ..?

Thursday, January 14, 2010

குறளும் குத்து மதிப்பும்-(குறள் எண் :963)

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

* மு.வ : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.
* சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தில் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தில் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்
. பழனி ராஜ் : மாருதியில் ஏறும் போது தலை குனியனும் ரிக்ஷ்ஷவில் போறப்ப நிமிந்து போவனும்

குறளும் குத்து மதிப்பும் -குறள் எண் :107

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.


மு.வ : அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.
* சாலமன் பாப்பையா : இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.
பழனிராஜ்: அவனாக தந்தால் இனியன் ..அழுகொண்டே அளப்பவன் சிறியன்