Friday, November 27, 2009

காதலிக்க நேரமுண்டு

பிரமனின் படைப்பே..! என
வியந்த போது - நீ
தேவதையானாய்
உன்விழிபார்வையை சுமக்க
முடியாது -நான்
பலகினமானேன்
நாம் உலாவந்த
இடங்கள் எல்லாம்
சுவர்க்கமானது
தந்தையின் பேச்சுக்கு
நீ இசைந்ததால் -நான்
பைத்தியமானேன்
இந்தவரிகள் நீ
படிக்கும் போது
கவிதையாகும்..நானோ
காவியமகியிருப்பேன்

No comments:

Post a Comment