Saturday, March 13, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.


மு.வ உரை:

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.


சாலமன் பாப்பையா உரை:

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.


என் குத்து மதிப்புரை
என்ன ஒரு இரத்தின சுருக்கமான உரை .
விவசாய கல்லுரி மாணவன்
"சாகுபடியை பெருக்க என்ன வழி முறை?"
என்றால் இதை பிட்டெழுதி எடுத்துகிட்டு
போனா முழு மதிப்பெண் கிடைச்சுவிடும்

No comments:

Post a Comment