Sunday, March 14, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கலைஞர் உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


மு.வ உரை:
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி தாம்பத்திய உறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

என் குத்து மதிப்புரை
கன்னி ஒருத்தி
கைக்குழந்தை அழுக்கை போக்க
தாய்பால் கொடுக்க முயற்சிப்பது போல்

1 comment:

  1. Your's is better than the kalaigner, mu.va and salaman paappaya...excellent one

    ReplyDelete