Sunday, March 14, 2010

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.


கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.


மு.வ உரை:

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.


என் குத்து மதிப்புரை
காதலுக்கு வித்திட்ட கண்கள் அதை இன்று கண்ணீர் ஊற்றி வளர்கின்றனவோ ...

No comments:

Post a Comment