Friday, March 12, 2010

குறளும் குத்து மதிப்பு -குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கலைஞர் உரை:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.


மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


சாலமன் பாப்பையா உரை:
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.


என் குத்து மதிப்புரை
ஊரைக் கூட்டி நீ
கும்பிடும் குரு
மான் தோல் உடுத்தி
புலித்தோல் மீது
அமராது தரிசனம் தந்தால்
அவர் கரிசனத்திற்கு
வன விலங்குகளும் அவரை
வணங்கும் எந்நாளும் ..
..

No comments:

Post a Comment