Wednesday, March 10, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 927:

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.


கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.


மு.வ உரை:

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.


சாலமன் பாப்பையா உரை:

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.


என் குத்து மதிப்புரை
ஒரு குவாட்டர் அடிச்சு

இவன் எடுத்த வாந்தி
இவனுக்கு மட்டும் தெரியும்
யாருக்கும் தெரியாது.....
ஒரு full அடிச்சு
இவன் எடுத்த வாந்தி
ஊருக்கே தெரியும்
இவனுக்கு மட்டும் தெரியாது ...

No comments:

Post a Comment