Saturday, March 6, 2010

குறளும் குத்து மதிப்பு - குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வ உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

என் குத்து மதிப்புரை:
எதிர்க்கட்சி , கூட்டணி கட்சி,
தன்கட்சி அதன் உட்கோஷ்டி..
எல்லாத்தையும் ஆராயிந்து ...
டெப்பாசிட் இழக்க
ஒரு இழிச்சவாயன்
வேட்பாளர் கிடைக்காத நிலையில்
தேர்தலில் யாருக்கும்
ஆதரவு இல்லை என்று
தேர்தலை புறக்கணிக்கலாம்

No comments:

Post a Comment