Thursday, March 4, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 834:)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கலைஞர் உரை:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.


மு.வ உரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.


சாலமன் பாப்பையா உரை:
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.


என் குத்து மதிப்பு

'கழிப்பிடத்திற்கு வெளியே
கழிக்காதே சிறுநீர்'
என்ற வாசகம்
சுமந்து நிற்கும்
சுவர் மீதே ..அதை
வசித்து கொண்டே
காரியம் முடிக்கும்
கயவான்கள் -இதில்
கால்நடை காட்டிலும்
"கழிசல்கள் "

No comments:

Post a Comment