Sunday, March 7, 2010

குறளும் குத்து மதிப்பும் - குறள் 181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.



மு.வ : ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

என் குத்து மதிப்புரை
ஒண்ணுமே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை
"போட்டு கொடுக்க " கூடாது ..

No comments:

Post a Comment