Thursday, March 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

மு .வ உரை:

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

என் குத்து மதிப்புரை
வார்டு தோறும் வாக்களர் எண்ணிக்கை
நோட்டுக்கு எத்தனை வோட்டு
அத்தனையும் கணக்கிலிட்டு
வேட்பு மனு தாக்கலிருந்து..
வெற்றி விழா வரை
உடல் வழியின்றி
உக்கார்ந்த இடத்தில் முடிப்பவனுக்கே ..
அப்பணியை தருதல் சிறந்தது

No comments:

Post a Comment