Thursday, March 11, 2010

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

கலைஞர் உரை: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வ உரை: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

என் குத்து மதிப்புரை
வாங்குகிற பொருளுக்கெல்லாம்
warrenty உண்டு மாத கணக்கில் -இந்த
வரதட்ஷ்ணையில் வந்தவருக்கோ
ஒரு கேரண்டியும் இல்லை வருடகணக்கில்
" Use and throw " என்று
உதறி தள்ள இவரோன்றும்
சைனா சாமான் அல்ல
எங்க நாயின வாங்கி தந்த மாப்பிள்ளை

No comments:

Post a Comment