Sunday, January 16, 2011

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண்1095)


குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.
கலைஞர் உரை:
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.
மு.வ உரை:
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

என் குத்து மதிப்புரை :
சாய்ந்து பார்த்தல் அது காகம் -கண்
சுழற்றி பார்த்தல் உனக்கு வரத்துடிக்கும் பேகம்
தலையை சாய்வா பார்த்தால் பறவை
கண்ணை சரித்து பாத்தால் பாவை
ரெண்டும் மகிழும் இரை
கண்டு மகிழும்

No comments:

Post a Comment