Wednesday, January 12, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 739:)


நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
கலைஞர் உரை:
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.
மு.வ உரை:
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை:
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.
என் குத்து மதிப்புரை :-
குறைந்த உற்பத்தி செலவு ... அதிக அளவு உற்பத்தி ..லாபம் ..இந்த சூட்சமம் நன்கறிந்தவன் நல்ல நிர்வாகி ... இதனை ஒரு நாட்டின் பொருளாதரத்திற்கு பொருந்தும் அளவிற்கு சொல்லியிருக்கிறார் ...
நோபல் பரிசு எல்லாம் அப்ப இல்லை .. இந்த பொருளாதார நிபுணருக்கு தர ...

No comments:

Post a Comment