Monday, January 24, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 909)


அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
கலைஞர் உரை:
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
மு.வ உரை:
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
என் குத்து மதிப்புரை :
முழுநேரம் வீட்ல வேல செய்து பகுதி நேரம் வெளில வேல செய்ஞ்சா வரும் பொருள் விகுதி குறைவா இருக்கும்
திருவோடு உள்ளே ஏந்திரவன் தெருவோடு போறவனுக்கு என்ன தருமம் பண்ண முடியும் .

No comments:

Post a Comment