Tuesday, January 25, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 875)

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
என் குத்து மதிப்புரை :
"தனித்து நின்றால் தாங்காது
தேர்தல் கூட்டணி இலையேல் தேறாது "என்று
தொகுதி உடன்பாடு கொள்ளும் கட்சிகள் போல

2 comments:

  1. Vijayakanth intha kuralai padichittaaro...?

    athaan ADMK kuda senthuttaar pola...!

    ReplyDelete
  2. அட வள்ளுவருக்கும் கூட்டனி தர்மம் தெரியும் போல் இருக்கே...தீர்க்க தரிசி தான்.

    ReplyDelete