Wednesday, January 12, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 731:)


தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
கலைஞர் உரை:
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
மு.வ உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
என் குத்து மதிப்புரை
மனித வளம், முதலீடு செய்வோர் , நிர்வாகத்தினர் , இயற்க்கை வளம் , இத்தியாதி , வகையறா ... இவையெல்லாம் தேசிய வருமானத்திற்கு (NATIONAL INCOME) அடிப்படை தேவை என்பதை ... இன்று MBA STUDENTS படித்துக்கொண்டு இருக்கும் பாடத்தை அய்யன் அப்பவே சொல்லியிருக்கார் ...

1 comment:

  1. anna neenga MBA mudichitteengala? athan sylabus ellaam therinji vechirkeenga

    ReplyDelete