குறளும் குத்து மதிப்பும் (குறள் 731:)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
கலைஞர் உரை: செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
மு.வ உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
என் குத்து மதிப்புரை
மனித வளம், முதலீடு செய்வோர் , நிர்வாகத்தினர் , இயற்க்கை வளம் , இத்தியாதி , வகையறா ... இவையெல்லாம் தேசிய வருமானத்திற்கு (NATIONAL INCOME) அடிப்படை தேவை என்பதை ... இன்று MBA STUDENTS படித்துக்கொண்டு இருக்கும் பாடத்தை அய்யன் அப்பவே சொல்லியிருக்கார் ...
anna neenga MBA mudichitteengala? athan sylabus ellaam therinji vechirkeenga
ReplyDelete