Thursday, January 20, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 751)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
கலைஞர் உரை:
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
மு.வ உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.
என் குத்து மதிப்புரை :
கைநாட்டு கையில கரன்சி நோட்டு இருந்தால் ஒய் நாட என்று உலகே ஓன்று கூடி பாராட்டு விழா எடுக்கும்

1 comment:

  1. அண்ணே, இதுதாண்ணே குத்து, ஒரிஜினல் உரை. இதுக்குதாண்ணே நாங்க சாவறோம். வுட்டுப்புடாதீங்க!

    ReplyDelete