Monday, January 24, 2011

குறளும் குத்து மதிப்பும் (குறள் 913)

பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.
கலைஞர் உரை:
விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.
மு.வ உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.
என் குத்து மதிப்புரை :
எழுத்தாணி கொண்டு எழுதினாரா ?
ஓலையோடு ஒட்டிகொண்டிருந்த
கருக்கு மட்டையை கொண்டு விலாசினாரா ?
பட்டையை கிளப்பியிருக்கிறார் - எயிட்ஸ் வந்து
பாடையில் போரவனுக்கு புரிஞ்சா சரி .

No comments:

Post a Comment