Saturday, March 13, 2010

குறளும் குத்து மதிப்பும் குறள் எண்160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.


சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.


என் குத்து மதிப்புரை :
"தட்டுல சாதம்
போடும் முன்னே -கழுத!
உன் கச்சேரியும் ஆரம்பம்" என
நீயும் வேணாம்
உன் சோறும் வேணாம் என
வயித்தில் ஓடும்
ஓணானோடு திண்ணையில்
பட்னி கிடக்கும் விருமாண்டியை காட்டிலும்
தினமும் நடக்கும் கச்சேரி என
தின்னு முடிச்சு தட்டில் முகம்

காணும் கணவனே சிறந்தவன்

2 comments: