Wednesday, March 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 271 )

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


கலைஞர் உரை:
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


மு.வ உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.


சாலமன் பாப்பையா உரை:

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.


என் குத்து மதிப்பு
"கதவைத் திறந்து விடுங்கள்
காற்று வரட்டும் " என
ஒழுக்க சீலர் போல்
ஊரெங்கும் உபதேசம் ...
அறையில் புரியும் இவரின்
அந்தரங்க லீலையாவும்
ஊடகம் வழி
உலகத்தை சிரிக்க வைக்கும்

1 comment: