Sunday, February 28, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 398: )


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


கலைஞர் உரை:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.

என் குத்து மதிப்பு
என்ன ... இத படிச்சுட்டு தான் ...

டாக்டர் புள்ள டாக்டர் ...
எஞ்சினியர் புள்ள எஞ்சினியர் ...
சொல்றகளோ ..?
அந்த காலத்துல ...

படமுறையில சிலபஸ் ...
மாத்தவே மட்டங்க போலிருக்கு ...
ஏழு தலைமுறைக்கு வரும் போலிருக்கு ..!
வக்கீலுக்கு நல்ல பொருந்துமோ ..?


No comments:

Post a Comment