Monday, February 8, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் எண் :1 )

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பழனிராஜியின் குத்து மதிப்பு :
சுழலும் கோள்கள் -அவை
சுற்றி சுற்றி வர ஒரு
சூரியன் ..
உனக்கும் ஒரு உயிர்
அதை சுமக்க ஒரு மெய்
தொகுத்து தந்தவனை
இறைவன் என்பாயா..?
பகுதறிவாலே
இல்லை என்பாயா..?

No comments:

Post a Comment