Thursday, February 4, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 90 )

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

மு.வ : அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

சாலமன் பாப்பையா : தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

ப. பழனி ராஜியின் குத்துமதிப்பு : நீ உக்கார்ந்து இருக்கும்வரை தான் புல்தரை ..எழுந்து அதுமேல் நடந்தால் கட்டாந்தரை

No comments:

Post a Comment