Wednesday, February 24, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 560 )

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


மு.வ உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.


சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.


என் குத்து மதிப்பு
பாராளும் ஆட்சி பாரட்டுவிதமாக இல்லையேல்
"பாருக்குள்" இருந்து குடிப்பான் குடிமகன்
பால் குடிப்பதறியான் அவன் மகன்
கலர் T.V யோ கவலையை பறக்கடிக்கும்
கல்வியையும் துரத்தியடிக்கும்

No comments:

Post a Comment