Saturday, February 13, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் என் 1102: )

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

கலைஞர் உரை: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்.

மு.வ உரை: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

சாலமன் பாப்பையா உரை: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

குத்து மதிப்பு:
கல்யாணம் முடிந்த பிறகு நோய் தான் இருக்கும் மருந்துக்கு expiry date முடிஞ்சு போயிருக்கும் .. உனக்கும் எதிர்ப்பு சக்தி குறைஞ்சி போயிருக்கும்

No comments:

Post a Comment