Sunday, February 7, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் ; 599)

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.


கலைஞர் உரை:
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவது தான்.


மு.வ உரை:

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.


சாலமன் பாப்பையா உரை:
யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


குத்து மதிப்பு :
ஆபிசில எல்லாத்தையும் அடக்கியாளும் பெரிய பாஸு..
அந்தியில் அம்மையாரிடம் அடங்கி போகும் வெறும் புஸ்ஸு

முந்தானையால் உதறி தட்டிவிடும் தூசு

No comments:

Post a Comment