Wednesday, February 10, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 594)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

கலைஞர் உரை: உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

மு.வ உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.


சாலமன் பாப்பையா உரை:
தளராத ஊக்கம் உள்ளவனிடம், செல்வமானது தானே அவன் முகவரியை அறிந்து செல்லும்.


பழனி ராஜியின் குத்துமதிப்பு :
அசையா சொத்தெல்லாம் (immovable properties )
அசையா நிலையான
ஊக்கம் உடையவனிடத்தில் வந்து சேரும் ...
ஊக்கமுடன் ஓரிடத்தில்
இருந்து வட்டி வாங்கும்
மார்வாடி முதல் இடம் பெறுவார்

No comments:

Post a Comment