Friday, February 5, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 72 )

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மு.வ : அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வார்

சாலமன் பாப்பையா : அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்

குத்து மதிப்பு : ஈகை என்பதை நகை என்று பொருள்கொண்டு தனது அம்மணத்தை அது கொண்டு மறைப்பவர் அன்பிலார் ..அன்புடையாரோ ..தனது உடலும் தானமாக தந்து இறந்தபினும் ஜோதியாய் திகழ்வார் ..அவர் புகழே.. என்றும் நறுமணம் கமழும்..

No comments:

Post a Comment