Monday, February 1, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 33)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.(குறள் எண் :33)

* மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

* சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

பழனி ராஜியின் குத்து மதிப்பு : தபால் நிலையத்தில் அந்த முதியவருக்கு அஞ்சல் தலை வாங்க காசு கொடுக்க வேணாம் ... அதை ஓட்ட "பசை டப்பா" நாலு கவுன்ட்டர் தள்ளி இருக்கும் எடுத்து வந்து கனிவா ஒட்டி தபால் பெட்டியில் போடு ..

No comments:

Post a Comment