Saturday, February 6, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 619 )

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

குத்துமதிப்பு :
இறைவனும் பாவம்

படியரிசி தான் அளப்பார்
சோம்பேறிய இருப்பவனுக்கு
சோறு ஆக்கமுடியாது அவரால் ..
FAST FOOD ஓட்டல் நடத்தி
HOME DELIVERY பண்ணுவதுதில்லை அவர்
உன் உழைப்புக்கு ஏத்த ஊதியம்
தரும் முதலாளி
அரை நாள் வேலை
அரை நாள் சம்பளம்
STEPS க்கு மதிப்பெண் தரும் ஆசிரியர்
"உழைப்புக்கு ஏற்ற கூலி -அதுக்கு
நீ செய்யவேணும் முயற்சி "

No comments:

Post a Comment