Saturday, February 13, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 118 )

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


மு.வ உரை:

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.


சாலமன் பாப்பையா உரை:

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

குத்து மதிப்பு :
என்னதான் நீ ..!

ஒரு பக்கமா பிடிச்சு வச்சாலும் ...
ஆடி ஆடி

ஆமாம் சாமி போடுவது போலிருந்து
கடைசில் நேர நிமித்து
நிக்கும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி ...
சம நிலையை அடைவர் சான்றோராகிய நீதிபதிகள்

No comments:

Post a Comment