Thursday, January 28, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 423 )

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

பழனி ராஜ் : "அண்ணாச்சியின் கட்சி நிர்வாகத்தை தலைவர் பாராட்டினால் ஆட்சியில் அவருக்கு இடம் இல்லை" என்றும்
'இந்த முறை கூட்டணி கட்சிக்கு அதிக இடம்" என்றால் .."அவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உள்ள தொகுதிகள் எல்லாம் தன்கட்சிக்கு" என்றும் பொருள் ..வெறுமன தலைப்பு செய்தியை மட்டும் பார்க்க கூடாது உறைக்கு உள்ளே உறைந்து கொண்டிருக்கும் பொருளையும் ஆராய வேணும் ..!

No comments:

Post a Comment