Tuesday, January 26, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 15 )

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை


மு.வ : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்

சாலமன் பாப்பையா : பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்

பழனி ராஜ் : மும்மாரி பெய்தால் முல்லைக்கு தேர் கொடுப்பன் பாரி ...அது முடியாது போனால் எங்கும் கூக்குரல்கள் கேட்பான் பாரீ..!

No comments:

Post a Comment