Tuesday, January 26, 2010

குறளும் குத்து மதிப்பும்-( குறள் எண் : 948 )

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

மு.வ : நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

சாலமன் பாப்பையா : நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.

பழனி ராஜ்: தும்பை விட்டுட்டு வாலை பிடிக்க வோணாம்.....!இப்பவாவது புரிஞ்சுதா ? டாக்டர் நோயாளியிடம் "ஆ காட்டு " ன்னு ஏன் ..சொல்றார் ..? நோயின் முதல் நாடி வாய் அதை கட்டுபடுத்திவிட்டாலே (உணவு கட்டுப்பாடு ) பாதி நோய் காணாமபோயிடும்..

No comments:

Post a Comment