Thursday, January 28, 2010

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 467 )

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.

மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

பழனி ராஜ் : பயணம் தொடங்குமுன் பையில் இருப்பது பயண சீட்டா பிளாட்பாரம் டிக்கட்டா....பார்த்துட்டு வண்டி ஏறணும்..வீடோட மாப்பிளையாக இருந்தது போதும் ன்னு வண்டி ஏறுன பிறகு பார்த்துக்கிடலாம்னு வண்டி ஏறினால்..மவனே ..! ஒரு மாமியார் வீட்டை விட்டு இன்னொரு மாமியார் வீட்டை போயி சேரவேண்டியது வந்தவிடும்

No comments:

Post a Comment