Sunday, January 24, 2010

குறளும் குத்து மதிப்பும் -( குறள் எண் : 314 )

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்
நாணநன்னயஞ் செய்து விடல்.



மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா : நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே

பழனி ராஜ் : வேட்டியை உறுவினவனுக்கு அதாலே பொன்னாடை போர்த்தி நாணமடைய செய்துவிட வேண்டும்

No comments:

Post a Comment