Sunday, January 31, 2010

குறளும் குத்துமதிப்பு (குறள் எண் : 69)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

மு.வ : தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

கலைஞ்சர் .மு. கருணாநிதி :நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

சாலமன் பாப்பையா :தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்

குத்து மதிப்பு
எத்தனையோ ஜட்டி
ஈரமாக்கிய உடனேயே மாத்தி
கொஞ்சி மகிழ்ந்த குழந்தைக்கு
உடுத்த மாத்து இல்லாது -இப்ப
ஒரே ஜட்டியில் ஊரெல்லாம்
சுற்றி வரும் நிலையிலும்
ஆனந்த கண்ணீர் வடிக்கும்
..................................தாய்..
சூப்பர் மெனின் தாய்

No comments:

Post a Comment